1.5 கிலோ எடை கொண்ட மருந்துகளை தொலைதூர இடங்களுக்கு வான்வழியே விநியோகம் செய்ததன் மூலம், மேகாலயாவில் மருந்துகளைக் கொண்டு செல்வதற்கான ஆளில்லா விமானங்களுக்கான இந்தியாவின் முதல் நிலையம் திறக்கப் பட்டது.
ஒரு புத்தொழில் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட சர்டிபிளேன் X3 எனப்படும் ஆளில்லா விமானமானது, மருந்துப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு 36 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது.
அம்மாநிலத் தலைநகர் ஷில்லாங்கிற்கு அடுத்தபடியாக மேகாலயாவின் மிகப்பெரிய நகர்ப்புற மையமாக விளங்கும் துராவிலிருந்து 32 கிமீ தொலைவில் உள்ள ஜெங்ஜால் பகுதியானது மருந்துப் பொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களுக்கான ஓர் உத்திசார் நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரமானது, சாலைப் போக்குவரத்திற்கு ஆகும் நேரத்தை விட கிட்டத்தட்ட 2 மணிநேரம் குறைவாகும்.
இந்த ஆளில்லா விமானமானது 4 கிலோ எடை வரை சுமந்து கொண்டு பறக்கும் திறன் கொண்டது.