மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் முதல் ஆளில்லா விமானப் பயிற்சிப் பள்ளியை மத்தியப் பொது விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ஐந்து ஆளில்லா விமானப் பயிற்சிப் பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும்.
மற்ற நான்கு நகரங்கள் போபால், இந்தூர், ஜபல்பூர் மற்றும் சத்னா ஆகியனவாகும்.