TNPSC Thervupettagam

ஆளில்லா விமானம் - சோதனை

April 16 , 2019 1922 days 620 0
  • விமானப் போக்குவரத்து பொது இயக்குனரகமானது (The Directorate General of Civil Aviation - DGCA) தொலைதூர விமான ஓட்டிகளுக்கான விமான அமைப்புத் திட்டத்தின் கீழ் (Remotely Piloted Aircraft System - RPAS) வேலூர், சேலம், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களை ஆளில்லா விமானங்களுக்கான புதிய சோதனை  இடங்களாக அறிவித்துள்ளது.
  • சிவில் தொலைதூர விமான ஓட்டிகளுக்கான விமான அமைப்பு 2018 செயல்பாட்டின் தேவைகளானது விமானப் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக ஆளில்லா வான்வழி விமானங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது.
  • ஆளில்லா விமானங்கள் செயல்பாட்டிற்கு வரும் முன்னர் அனைத்து ஆளில்லா விமானங்களும் “டிஜிட்டல் ஸ்கை” என்ற தளத்தில் DGCA – உடன் பதிவு செய்வது கட்டாயமாகும்.
  • RPAS ஆனது ஆளில்லா விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள மண்டலங்களாக விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகள், சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகள், தில்லியில் உள்ள விஜய் சவுக், மாநிலத் தலைநகரங்களில் அமைந்துள்ள தலைமைச் செயலக வளாகம், உத்திசார் முக்கியமான / இராணுவத் தளவாடங்கள் அமைந்துள்ள இடங்கள் ஆகியவற்றை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்