ஆளுநரால் முன்னதாக நிராகரிக்கப்பட்ட முன்மொழியப்பட்டுள்ள ஒரு சட்டம் ஆனது, அம்மாநிலச் சட்டமன்றத்தினால் இரண்டாவது முறையாக சமர்ப்பிக்கப்படும் போது, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஒரு மசோதாவை ஒதுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசியலமைப்பின் 200வது சரத்தின் கீழ், முதல் முறையாக ஒப்புதலுக்காக அனுப்பப் பட்ட 10 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் ஏதும் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தார்.
இருப்பினும், அந்த மசோதாக்கள் மாநிலச் சட்டமன்றத்தினால் மீண்டும் நிறைவேற்றப் பட்டு இரண்டாவது முறையாக மீண்டும் சமர்ப்பிக்கப்படும் போது ஆளுநர் அவற்றைக் குடியரசுத் தலைவரிடம் பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்தார்.
ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு ஒதுக்க விரும்பினால் அவர் அதனை முதல் கட்டத்திலேயே செய்திருக்க வேண்டும்.
ஒரு மசோதாவானது, "200வது சரத்தின் முதல் விதியின்படி மறுபரிசீலனைக்குப் பிறகு மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டால், ஆளுநர் உடனடியாக அல்லது மிகவும் அதிகபட்சம் ஒரு மாத காலக் கட்ட வரம்பிற்கு உட்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.