TNPSC Thervupettagam

ஆள்கடத்தலுக்கு எதிரான உலக தினம் - ஜூலை 30

August 2 , 2018 2248 days 543 0
  • ஆள்கடத்தலுக்கு எதிரான உலக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆள்கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மற்றும் அவர்களை ஊக்கப்படுத்த இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்காக மருந்துகள் மற்றும் குற்றங்கள் மீதான ஐக்கிய நாடுகள் அலுவலகம் (United Nations Office on Drugs and Crime - UNODC) தேர்ந்தெடுத்துள்ள கருத்துருவானது “குழந்தைகள் மற்றும் சிறு வயதினரின் கடத்தலுக்கு பதில் அளித்தல்" ஆகும்.
  • இத்தினம் கடத்தப்பட்ட குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இத்தினத்தை அனுசரிப்பதன் மூலம் கவனத்திற்கு கொண்டு வருகிறது. மேலும் கடத்தப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் நீதி அளிப்பது ஆகியவற்றுக்கு தக்க நடவடிக்கைகளை எடுக்க இத்தினம் ஊக்கப்படுத்துகிறது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2013ஆம் ஆண்டு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் ஆள்கடத்தலுக்கு எதிரான உலக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்