சீனாவானது கடல்சார் ஆய்வுகளை பரிமாற்றி அமைக்கக் கூடிய வகையில் ஆழ்கடல் ஆராய்ச்சிக் கட்டமைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
"ஆழ்கடல் வாயு வெளியேற்ற விரிசல்" என்ற சூழல் அமைப்பு ஆராய்ச்சி மையமானது, உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த தென் சீனக் கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 2000 மீட்டர்கள் (6560 அடி) கீழே நிறுவப்பட உள்ளது.
இந்த மையமானது மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப் பட்ட ஒரு அறிவியல் சார்ந்த கடலடி மையங்களில் ஒன்றாக இருக்கும்.
அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிகு அடுத்தபடியாக ஆழ்கடல் ஆய்வு நிலையத்தினை உருவாக்கி இயக்கும் உலகின் மூன்றாவது நாடாக சீனா மாற உள்ளது.
2008 ஆம் ஆண்டில் செயல்பாட்டில் இருந்து விலகிய ஒரு அமெரிக்க ஆழ்கடல் ஆய்வு நிலையம் ஆன NR - 1 ஆனது அணுசக்தியில் இயங்கிய நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.
அணு உலையின் மூலம் இயக்கப்படும் சோவியத் ஒன்றியத்தின் ஆய்வு நீர் மூழ்கிக் கப்பலான AS-12 லோஷாரிக் 2000 மீட்டர் ஆழம் வரை எட்டியது.
இது 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பெருந்தீ விபத்தினால் பாதிக்கப்பட்டதையடுத்து, ரஷ்யாவினால் கை விடப்பட்டது.