பாலிவுட் நடிகர் கஜோல் மற்றும் தமிழ் நடிகர் சூர்யா ஆகியோருக்கு மோஷன் பிக்சர் கலை மற்றும் அறிவியல் அகாடமியின் 2022 ஆம் ஆண்டின் குழுவில் சேர அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
இந்த அகாடமி ஒவ்வோர் ஆண்டும் ஆஸ்கார் விருது விழாக்களை நடத்துகிறது.
2022 ஆம் ஆண்டிற்கான இந்தக் குழுவில் சேர அழைக்கப்பட்டுள்ள, உலகெங்கிலும் உள்ள 397 புகழ் பெற்ற கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளில் இந்த இரண்டு இந்திய நடிகர்களும் அடங்குவர்.