TNPSC Thervupettagam

இணையப் பத்திரங்கள் வசதி

June 5 , 2022 778 days 366 0
  • பஞ்சாப் அரசானது காகிதம் சார்ந்தப் பத்திரத் தாள்களை ரத்து செய்துள்ளது.
  • இது அதிக செயல்திறனைக் கொண்டு வருவதையும், அரசிற்கான வருவாய் மீதான  திருட்டைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதன் பிறகு, அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பத்திர விற்பனை நபர்களிடமிருந்து எந்தவொரு மதிப்பினையும் உடைய பத்திரத் தாள்களையும் இணையப் பத்திரங்கள் (கணினிமயமாக்கப்பட்ட நகல்) வசதி மூலம் தற்போது பெற இயலும்.
  • இம்மாநிலத்தில் இணையப் பத்திரங்கள் வசதியானது முன்னதாக 20,000 ரூபாய்க்கு மேல் உள்ள மதிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.
  • புதிய விதிகளின்படி, ஒரு ரூபாய் முதல் அனைத்து மதிப்புகளுக்கும் இந்த வசதி விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்