TNPSC Thervupettagam

இணையவழி சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அவசரச் சட்டம்

September 30 , 2022 661 days 474 0
  • இணையவழி சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்துவதற்கான ஒரு அவசரச் சட்டத்தை வெளியிட தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மற்றும் காவல்துறை திருத்தச் சட்டத்தினை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து ஒரு வருடத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தச் சட்டமானது இணையவெளியில் பணயம் அல்லது பந்தயம் கட்டுவதற்காக ஒரு  தடையை விதித்தது.
  • முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி K.சந்துரு அவர்களின் தலைமையின் கீழ் மாநில அரசு ஒரு குழுவை அமைத்தது.
  • இந்தக் குழுவானது மாநிலத்தில் இணையவழி சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தச் செய்வதற்கான அவசரச் சட்டத்தை வெளியிடுவதற்குப் பரிந்துரை செய்தது.
  • அமெரிக்காவில் 60-70% இணையவழி சூதாட்டப் பயனர்களை ஒப்பிடுகையில், இந்திய மக்கள் தொகையில் 20% பேர் இணையவழி சூதாட்டங்களை விளையாடுகிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்