இணையவழிக் குற்றம் தொடர்பான ஐ.நா.வின் புதிய சர்வதேச ஒப்பந்தம்
December 30 , 2019 1699 days 593 0
ஐக்கிய நாடுகள் சபையானது இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக ஒரு புதிய தீர்மானத்தை நிறைவேற்றிட ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் தீர்மானமானது ரஷ்யாவால் தயாரிக்கப்பட்டு ஐ.நா அமைப்பின் 193 உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
இணையம் மற்றும் கணினி வழியாக நடைபெறும் குற்றங்களை நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் அமைந்த இணையவழிக் குற்றம் தொடர்பான முதல் ஒப்பந்தமாக புடாபெஸ்ட் ஒப்பந்தம் இருந்தது.
இந்தத் தீர்மானமானது ஐரோப்பிய ஒன்றியக் குழுவால் உருவாக்கப்பட்டது.
தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் உள்ள இணையவழிக் குற்றம் தொடர்பான ஒரே ஒப்பந்தம் இதுவேயாகும்.
இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் இதுவரை இந்த ஒப்பந்தத்தை ஏற்க வில்லை.