எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீயின் இந்திப் புனைவுக் கதையான 'Tomb of Sand', மதிப்புமிக்க சர்வதேசப் புக்கர் பரிசை வென்றது.
மதிப்புமிக்க இந்தப் பரிசை வென்ற முதல் இந்திய மொழிப் புத்தகம் இதுவாகும்.
எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக 2004 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது.
இது முன்னதாக சர்வதேச மேன் புக்கர் பரிசு என்று அழைக்கப்பட்டது.
இது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு படைப்பிற்காக எந்தவொரு நாட்டினைச் சேர்ந்தச்சமகால எழுத்தாளருக்கும் வழங்கப் பட்டது.
2016 ஆம் ஆண்டிலிருந்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஐக்கியப் பேரரசு அல்லது அயர்லாந்தில் வெளியிடப்பட்டப் புத்தகத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப் படுகிறது.