மத்திய அரசு தனது புதிய அரசியல் வரைபடத்தில் ஆந்திர மாநிலத் தலைநகரான “அமராவதி” நகரத்தை இணைத்துள்ளது. இந்தியாவின் புதிய அரசியல் வரைபடமானது இந்திய நில அளவைத் துறையினால் வெளியிடப் பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதியன்று இந்திய நில அளவைத் துறையினால் வெளியிடப்பட்ட புதிய அரசியல் வரைபடத்தில் அமராவதி நகரம் விடுபட்டிருந்தது.
இந்தப் புதிய அரசியல் வரைபடமானது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய புதிய ஒன்றியப் பிரதேசங்களை மறுசீரமைத்த பின்னர் அரசினால் வெளியிடப்பட்டது. இந்த மறுசீரமைப்பு அக்டோபர் 31 ஆம் தேதியன்று அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
தெலுங்கானா மாநிலமானது ஹைதராபாத்தைத் தனது மாநிலத் தலைநகராகக் கொண்டுள்ளது. மேலும் இந்த நகரம் ஆந்திராவிற்கும் தலைநகராக உள்ளது. 2014 ஆம் ஆண்டில் ஆந்திரா மாநிலத்திலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட நாளிலிருந்து, அடுத்த 10 ஆண்டு காலத்திற்கு இந்த நகரம் இரு மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்கும்.