TNPSC Thervupettagam

இந்திய இரயில்வே கெய்ல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

September 1 , 2018 2152 days 612 0
  • கெய்ல் (இந்தியா) நிறுவனமானது, விநியோகிப்பாளரின் பட்டறைகள், உற்பத்தித் தளங்கள், கிடங்குகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு, இயற்கை எரிவாயுவை விநியோகிப்பதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக, இந்திய இரயில்வேயுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டுள்ளது.
  • இது, உட்கட்டமைப்பை உருவாக்கவும், தொழில்துறை மற்றும் வீட்டுப் பயன்பாட்டிற்காக, அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG), குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) போன்றவற்றை விநியோகிப்பதையும்  நோக்கமாகக் கொண்டதாகும்.
  • இந்த உடன்படிக்கையானது, தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் வாயுக்களான அசிட்டிலின் கரைசல், திரவ இயற்கை எரிவாயு (LPG), பாரத் உலோகவெட்டு எரிவாயு, உலை எண்ணெய் மற்றும் அதிவேக டீசல் எனப்படும் ஹை-ஸ்பீடு டீசல் போன்றவற்றின் மாற்றாக இயற்கை எரிவாயுவை உபயோகிக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்