2021 ஆம் ஆண்டின் இந்திய உயிரிப் பல்லுயிர்ப் பெருக்க விருதுகள் மே 22 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்ட சர்வதேச உயிரிப் பல்லுயிர்ப்பெருக்கத் தினத்தன்று வழங்கப் பட்டன.
“உயிரி வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துதல்” எனும் பிரிவின் கீழ் கிருஷி அவம் பரிஷ்டிகி விகாஸ் சன்ஸ்தான் (KRAPAVIS - Krishi Avam Paristhitiki Vikas Sansthan) எனும் அமைப்பிற்கு ஒரு விருது வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் “கிழங்குப் பயிர்களின் நாயகன்” என அழைக்கப்படுகின்ற N.M. சாஜி அவர்களுக்கு ‘உள்நாட்டு உயிரினங்களைப் பாதுகாத்தல்’ எனும் தனிப்பிரிவில் ஒரு விருது வழங்கப் பட்டுள்ளது.
நாகலாந்திலுள்ள கோனோமா இயற்கை வளங்காப்பு மற்றும் டிராகோபன் சரணாலயம் ‘உயிரிவளங்களை நிலையான முறையில் பயன்படுத்துதல்’ எனும் பிரிவின் கீழ் ஒரு விருதினை வென்றுள்ளது.
இந்தியா உயிரிப் பல்லுயிர்ப் பெருக்க விருதுகளுக்கான முன்னெடுப்பானது 2012 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், தேசிய உயிரிப் பல்லுயிர்ப் பெருக்க ஆணையம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றால் இணைந்து தொடங்கப் பட்டதாகும்.