TNPSC Thervupettagam

இந்திய கைபேசி மாநாடு - 2018

April 18 , 2018 2286 days 705 0
  • இந்திய கைபேசி மாநாட்டின் (India Mobile Congress) இரண்டாவது பதிப்பு 2018 ஆம் ஆண்டின் அக்டோபர் 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது.
  • இந்திய கைபேசி மாநாட்டின் இரண்டாவது பதிப்பினுடைய கருப்பொருள்   “புதிய  டிஜிட்டல் எல்லை அடுக்குகள் - இணைப்பு, உருவாக்கம், புத்தாக்கம்” (New Digital Horizons - Connect, Create, innovate) என்பதாகும்.
  • இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர்கள் சங்கம் (Cellular Operators Association of India-COAI) மற்றும் மத்திய தொலைத் தொடர்புத் துறை  (Department of Telecommunications (DoT)) ஆகியவை  இந்த மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளன.
  • முதல் இந்திய கைபேசி மாநாடு 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புது தில்லியில் பிரகதி மைதானில் நடைபெற்றது.
  • தொலைத் தொடர்பு துறையின் எதிர்கால செயல்பாட்டை வழி நடத்துவதற்கு கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் ஓர் அர்த்தமுள்ள விவாதத்தில் (meaningful deliberations) ஈடுபட அவர்களுக்கு ஓர் மேடையை வழங்குவதற்காக 2017-ஆம் ஆண்டு   இந்திய கைபேசி  மாநாடு   துவங்கப்பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்