2020 ஆம் ஆண்டின் இந்திய சர்வதேசக் கடல் உணவுக் கண்காட்சியின் (India International Seafood Show - IISS) 22வது பதிப்பானது கேரளாவின் கொச்சியில் தொடங்கப் பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியானது “நீலப் புரட்சி - உற்பத்திக்கு அப்பால் மதிப்பு கூட்டல்” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்ச்சியானது கடல்சார் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகியவற்றினால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியானது 12 ஆண்டுகளுக்குப் பிறகு கொச்சியில் தற்பொழுது நடைபெற்றது. இதன் 21வது பதிப்பானது கோவாவில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்றது.