TNPSC Thervupettagam

இந்திய-சீன எல்லை ஒப்பந்தத்தின் 30 ஆண்டு நிறைவு

November 25 , 2023 238 days 166 0
  • முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இரு தரப்பு அதிகாரிகளும் எல்லை அமைதி மற்றும் சமாதான ஒப்பந்தத்தில் (BPTA) கையெழுத்திட்டனர்.
  • இதற்கு “இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பகுதிகளில் உள்ள மெய் கட்டுப்பாட்டுப் பகுதியில் (LAC) அமைதி மற்றும் சமாதானத்தைப் பேணுவதற்கான ஒப்பந்தம்” என்று பெயரிடப்பட்டது.
  • இரு தரப்பினரும் அப்போதைய நிலையைத் தொடர்ந்து பேணிக் காத்து, எதிர்பாரா மோதல்கள் நிகழும் அபாயத்தைக் குறைப்பதற்காக சட்டப்பூர்வமாக உறுதியளித்தது இதுவே முதல் முறையாகும்.
  • இந்த ஒப்பந்தம் ஆனது, இரு தரப்பினரையும் அப்போதைய நிலையைப் பேணிக் காக்கவும், எதிர்பாராத மோதல்கள் நிகழும் அபாயத்தைக் குறைக்கவும், LAC பகுதியில் இராணுவப் படைகளைக் குறைக்கவும் உறுதியளிக்கச் செய்தது.
  • LAC ஆனது இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை சீன நாட்டின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து பிரிக்கிறது.
  • இது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது:
    • கிழக்குப் பகுதி (அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம்)
    • மத்தியப் பகுதி (உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம்)
    • மேற்குப் பகுதி (லடாக்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்