TNPSC Thervupettagam

இந்திய செய்தித்தாள் தினம் - ஜனவரி 29

January 30 , 2024 172 days 313 0
  • இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் அச்சிடப்பட்ட செய்தித்தாள் என்பது ‘ஹிக்கி-இன் பெங்கால் கெஸட்’ என்ற ஆங்கில வார இதழாகும்.
  • இது 1780 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதியன்று ஓர் அயர்லாந்து நாட்டவரால் தொடங்கப் பட்டது.
  • இந்த நாள் ஆனது நாளிதழ்களை மேம்படுத்துவதையும், செய்தித்தாளை எடுத்து ஒவ்வொரு நாளும் படிப்பதற்கு மக்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • பெங்கால் கெஸட் பத்திரிக்கையின் நிறுவனர் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி "இந்தியப் பத்திரிகைகளின் தந்தை" என்று கருதப்படுகிறார்.
  • இந்தியாவில் தற்போதுள்ள மிகப் பழமையான செய்தித்தாள் ஆனது, 1822 ஆம் ஆண்டில் குஜராத்தி மொழியில் முதல் முறையாக வெளியிடப்பட்ட மும்பை சமாச்சார் (முன்னதாக பாம்பே சமாச்சார்) ஆகும்.
  • இந்தியாவின் முதல் தமிழ் செய்தித்தாள் 1882 ஆம் ஆண்டில் G.சுப்ரமணிய ஐயர் அவர்களால் ஒரு வார இதழாகத் தொடங்கப்பட்ட சுதேசமித்ரன் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்