நாட்டின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு விவசாயிகள் ஆற்றும் பங்களிப்புகள் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதை இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் ஐந்தாவது பிரதமரான சௌத்ரி சரண் சிங் அவர்களின் பிறந்தநாளை நினைவு கூரும் வகையில் இந்தத் தினமானது தேர்ந்தெடுக்கப்பட்டது.
விவசாயிகளின் மேம்பாட்டிற்காக வேண்டி பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்திய அவர், நம் நாட்டின் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எடுத்துரைத்து அதற்கானத் தீர்வையும் அளித்து அதில் பல புத்தகங்களை எழுதினார்.
சரண் சிங் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், அரசாங்கம் 2001 ஆம் ஆண்டில் கிசான் திவாஸ் தினத்தினைக் கொண்டாடியது.