இந்தியக் கடற்படையின் மூன்று நாட்கள் அளவிலான உயர்நிலை பிராந்திய உத்திசார் பேச்சுவார்த்தையான "2022 ஆம் ஆண்டு இந்திய-பசிபிக் பிராந்தியப் பேச்சு வார்த்தையானது" (IPRD-2022) புது டெல்லியில் நடைபெற்றது.
இது இந்திய-பசிபிக் பிராந்தியம் தொடர்பான கடல்சார் பிரச்சினைகள் குறித்த விவாதங்களை மேம்படுத்துவதற்கும், கருத்துப் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கும் முயல்கின்ற ஒரு வருடாந்திர சர்வதேச மாநாடாகும்.
2022 ஆம் ஆண்டு இந்திய-பசிபிக் பிராந்தியப் பேச்சுவார்த்தையின் கருத்துரு, "இந்திய-பசிபிக் பெருங்கடல் முன்னெடுப்பினைச் செயல்படுத்துதல்" என்பதாகும்.