TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் 90வது ஆண்டு நிறைவு

April 4 , 2025 18 days 64 0
  • மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்திய ரிசர்வ் வங்கியின் 90வது ஆண்டு நிறைவின் நினைவு நாணயம் வெளியிடப்பட்டது.
  • இந்திய ரிசர்வ் வங்கி ஆனது, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டு, தனியாருக்குச் சொந்தமான நிறுவனமாக 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது.
  • இது 1949 ஆம் ஆண்டில் 1948 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி (அரசு உரிமத்திற்கு மாற்றம்) சட்டம் மூலம் தேசியமயமாக்கப்பட்டது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் சர் ஆஸ்போர்ன் ஸ்மித் ஆவார்.
  • சர் C.D. தேஷ்முக் முதல் இந்திய ஆளுநர் ஆவார்.
  • ஒரு  ரூபாய் தாள்கள் மற்றும் நாணயங்களைத் தவிர மற்ற இந்தியப் பணத்தாள்களை வெளியிடுவதற்கும் மேலாண்மை செய்வதற்குமான பொறுப்பினை இந்திய ரிசர்வ் வங்கி கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்