TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை – 2021

June 1 , 2021 1146 days 667 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (Reserver Bank of India – RBI) தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • அதில் வங்கிகளின் சொத்துத் தரத்தினையும் வரவிருக்கும் காலாண்டிற்கான அதிகபட்ச நிதி வழங்குவதற்குத் தேவையான அவற்றின் தயார் நிலையையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.

முக்கிய தகவல்கள்

  •  2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாராக் கடன்களின் வகைப்பாடு மீது விதிக்கப் பட்ட இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியதையடுத்து வாராக் கடன்கள் பற்றிய உண்மையான தகவல்களை வங்கிகள் வழங்க வேண்டும் என RBI எச்சரித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்டு வரையிலான தற்காலிக கடன் தவணை சலுகையைத் தேர்ந்தெடுத்த அனைத்து கடன் கணக்குகளின் மீதான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்வது வங்கிகளின் நிதிநிலையின் மீது நெருக்கடியை திணிக்கும் என இந்த அறிக்கை கூறுகிறது.
  • வங்கிகளின் மொத்த வாராக்கடன் விகிதமானது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்த 8.2 சதவீதத்திலிருந்து 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 6.8% ஆக குறைந்து உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 66.6% ஆக இருந்த வங்கிகளின் நிதிப்பரவல் விகிதமானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 75.5% ஆக குறைந்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 14.8% ஆக இருந்த வங்கிகளின் இடர் உண்டாக்கும் சொத்துக்களின் விகிதமானது டிசம்பர் மாதத்தில் 15.9% ஆக உயர்ந்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் 6.8% ஆக இருந்த வங்கிசாரா நிதி நிறுவனங்களின் மொத்த வாராக் கடன் விகிதமானது டிசம்பர் மாதத்தில் 5.7% ஆக உயர்ந்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 23.7% ஆக இருந்த வங்கிசாரா நிதி நிறுவனங்களின் நிதி நிலைப்பாடு விகிதமானது (CAR) டிசம்பர் மாதத்தில் 24.8% ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்