இந்திய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புறக்கோள்
November 22 , 2021 1008 days 482 0
அபிஜித் சக்ரவர்த்தி என்பவர் தலைமையிலான இந்திய விஞ்ஞானிகள் வியாழனை விட 1.4 மடங்கு பெரிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய புறக் கோளானது சூரியனை விட 1.5 மடங்கு அதிக நிறையினைக் கொண்டு இருப்பதோடு, வியாழனை விட 1.4 மடங்கு பெரியதாகவும் உள்ளது.
இந்த புறக்கோள் ஆனது TESS அட்டவணையின்படி TOI 1789 என்றும் ஹென்றி டிராப்பர் அட்டவணையின்படி HD 82139 என்றும் அழைக்கப்படுகிறது.
அகமதாபாத்தைச் சேர்ந்த இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் இதனைக் கண்டுபிடித்து உள்ளது.
அதன் ஆராய்ச்சியாளர்கள் மவுண்ட் அபு ஆய்வகத்தில் உள்ள PRL (Physical Research Laboratory) அமைப்பின் 1.2 மீட்டர் அளவிலான தொலைநோக்கியில் PRL மேம்பட்ட சுற்று வட்ட-திசைவேக அபு-வான் ஆராய்ச்சி (PARAS - PRL Advanced Radial-velocity Abu-sky Search) ஒளியிழை மூலமான நிறமாலை அமைப்பினைப் பயன்படுத்தினர்.