TNPSC Thervupettagam

இந்திய விமானப் படை (IAF) இஸ்ரேலின் இராணுவப் பயிற்சியில் முதல் முறையாக பங்கேற்கிறது

November 10 , 2017 2443 days 776 0
  • முதன் முறையாக 45 பேர் கொண்ட இந்திய விமானப்படைக் குழுவானது இஸ்ரேலின் உவ்டா விமானப் படைத் தளத்தில் இஸ்ரேல் மற்றும் 8 பிற நாடுகளுடன் இணைந்து இரண்டு வாரகால நீலக்கொடி (Blue Flag) இராணுவப் பயிற்சியில் பங்கேற்கிறது.
  • இது இஸ்ரேலிய வரலாற்றில் மிகப்பெரிய கூட்டுப்போர் பயிற்சியாக அமைய உள்ளது.
  • ஆண்டிற்கு இருமுறை நடக்கும்  இந்நீலக் கொடி பயிற்சியானது சர்வதேச அளவில் இஸ்ரேலின் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்டதாகும். இந்தப் பயிற்சியில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கிரீஸ் மற்றும் போலந்து போன்ற நாடுகளுடன் இந்தியா இணைந்து பங்கேற்பது இதுவே முதன் முறையாகும்.
  • இந்தப் பயிற்சியானது பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதிலும் இணைந்து செயலாற்றும் தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக்  கொண்டது.
  • கேப்டன் மாலுக் சிங் வி.எஸ்.எம் (Maluk Singh VSM) தலைமையிலான இந்தியப் பிரிவு இஸ்ரேல் விமானப் படையின் வான்வழி மீட்பு மற்றும் வெளியேற்றுப்பிரிவுடன் பயிற்சியை மேற்கொள்ள உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்