TNPSC Thervupettagam

இந்திய விலங்குகள் நல வாரியம் தலைமையகம் மாற்றம்

March 8 , 2018 2327 days 2713 0
  • இந்திய விலங்குகள் நல வாரிய (Animal Welfare Board of India - AWBI) தலைமையகத்தை சென்னையிலிருந்து ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தின் பல்லாம்கருக்கு (Ballabhgarh)  இந்திய அரசு மாற்றியுள்ளது.
  • விலங்குகள் நல்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும்  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் AWBI-க்கு இடையே சிறந்த ஒருங்கிணைவை ஏற்படுத்துவதற்காகவும் AWBI உடனான கலந்தாலோசனைக்குப் பிறகு தற்போது இந்திய விலங்குகள் நல வாரியத்தின்   தலைமையகம் மாற்றப்பட்டுள்ளது.
  • விலங்குகள் நல வாரியமானது 1960 ஆம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் (Prevention of Animal Cruelty Act 1960) பிரிவு 4ன் கீழ் 1962ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓர் ஆலோசனை வழங்குகின்ற சட்டப்பூர்வ  அமைப்பாகும்.
  • இந்த வாரியத்தில் 28 உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். தற்போது இதன் தலைவராகP.குப்தா உள்ளார்.
  • தொடக்கத்தில் இந்த ஆணையமானது மத்திய உணவு மற்றும் வேளாண் (Ministry of Food and Agriculture) அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது.
  • 1990-ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்புப் பிரிவானது (Subject of Prevention of Cruelty to Animals) மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்