இந்தியக் கடலோரக் காவல் படையானது இந்தியாவின் ஆயுதப் படையாகும்.
இது கடல்சார் வளங்களைப் பாதுகாத்துக் கடல்சார் சட்டத்தை அமலாக்கம் செய்கின்றது.
இந்தியக் கடலோரக் காவல் படையானது 1977 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 அன்று ஏற்படுத்தப் பட்டது.
ஆனால் இது கடலோரக் காவல் படைச் சட்டம் 1978 என்ற சட்டத்தின் மூலம் 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று ஒரு தனிச்சுதந்திர ஆயுதப் படையாக முறையாக ஏற்படுத்தப் பட்டது.