இந்தியக் கடலோரக் காவல்படை (ICG) ஆனது, பிப்ரவரி 01 ஆம் தேதியன்று அதன் 49வது ஸ்தாபனத் தினத்தைக் கொண்டாடியது.
1978 ஆம் ஆண்டு கடலோரக் காவல்படை சட்டத்தின் விளைவாக, இந்தப் படையானது 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் கடல் சார்ந்த எல்லைகளை நன்குப் பாதுகாத்தல், தேடல் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் கடத்தல்காரர்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பது ஆகியவை இந்தப் படையின் நோக்கங்களில் அடங்கும்.
கடல் மாசுபாடு, கழிவுப் பொருட்களைக் கடலில் கொட்டுதல், எண்ணெய்க் கசிவுகள் போன்றவற்றைக் குறைக்கச் செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் இந்தப் படை மேற்கொள்கிறது.