இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மதிப்பு மிக்க குடியரசுத் தலைவரின் வர்ண விருதுகளை இராணுவ வான் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கினார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் வர்ண விருது என்பது ஒரு விழாவின் போது இந்தியக் குடியரசுத் தலைவரால் ஒரு படைப் பிரிவிற்கு வழங்கப்படும் படைப்பிரிவுக் கொடிகளாகும்.
அமைதி மற்றும் போரின் போது, தேசத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பான சேவைகளை அங்கீகரிப்பதற்காக ஆயுதப் படைப் பிரிவிற்கு வழங்கப்படும் மிகப்பெரிய கௌரவ விருதுகளில் இதுவும் ஒன்றாகும்.
இதுபற்றி
இராணுவ வான் பாதுகாப்பு படைகள் ஆனது இராணுவத்தின் இளம் படைப் பிரிவுகளில் ஒன்றாகும்.
இது 1989 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
பீரங்கிப் படைப் பிரிவானது 1989 ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் இராணுவ விமானப் பாதுகாப்புக் கல்லூரி (Army Air Defence College - AADC) நிறுவப்பட்டது.
AADC என்பது வான் பாதுகாப்புப் படையில் உள்ள பணியாளர்களுக்கான ஒரு பயிற்சிப் பள்ளியாகும்.