ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் இந்தியப் பத்திரிக்கை சபையின் முதல் பெண் தலைவர் ஆனார்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தின் சட்டமன்றத் தொகுதிகளை மறு வரையறை செய்வதற்காக சமீபத்தில் அமைக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் மீதான எல்லை நிர்ணய ஆணையத்திற்கு இவர் தலைமை தாங்கினார்.
இந்தியப்பத்திரிக்கைச்சபை
1978 ஆம் ஆண்டு இந்தியப் பத்திரிக்கைச் சபைச் சட்டத்தின் கீழ் இந்தியப் பத்திரிக்கைச் சபையானது நிறுவப்பட்டது.
இது ஒரு தலைவர் மற்றும் 28 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
இந்தியப் பத்திரிக்கைச் சபையானது அச்சு ஊடகத்தின் செயல்பாட்டை மட்டுமே கண்காணிக்கிறது.
வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகம் போன்ற மின்னணு ஊடகங்களின் செயல்பாட்டை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் இதற்கு இல்லை.