TNPSC Thervupettagam

இந்தியப் பெருந்தகைமை குறித்த அறிக்கை 2023

March 16 , 2023 490 days 266 0
  • தஸ்ரா மற்றும் பெயின் & கோ நிறுவனம் ஆனது சமீபத்தில் இந்தியப் பெருந்தகைமை குறித்த அறிக்கையினை வெளியிட்டது.
  • இந்தியாவில் பெருந்தகைமை நிலையைப் பற்றிய விரிவான பகுப்பாய்வான இந்த அறிக்கையானது, அவற்றின் சுவாரஸ்யமானப் போக்குகளைப் பற்றியத் தகவல்களை வழங்குகிறது.
  • இந்தியாவின் மிக அதிக-நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களினால் (UHNIs) மேற்கொள்ளப்படும் தொண்டு சார்ந்தப் பங்களிப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
  • முந்தைய நிதியாண்டில் 11,821 பில்லியனாக இருந்தப் பங்களிப்பானது 2022 ஆம் நிதி ஆண்டில் ரூ.4,230 பில்லியனாக குறைந்தது.
  • 2021 ஆம் நிதியாண்டில் ரூ.4,041 கோடியாக இருந்த மற்ற அனைத்து மூலங்களில் இருந்தும் வழங்கப்படும் மிக அதிக-நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களின் பங்களிப்பு ஆனது 2022 ஆம் நிதியாண்டில் 3,843 கோடியாகக் குறைந்து உள்ளது.
  • ஆனால் பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புச் சார்ந்த செலவினம் 5% அதிகரித்து, 2021-22 ஆம் ஆண்டில் 27,000 கோடி ரூபாயாக இருந்தது.
  • இந்தியாவின் அதிக-நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் பங்களிப்பு வழங்கி உள்ளனர்.
  • பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புச் சார்ந்தப் பங்களிப்புகள் ஆண்டுதோறும் 19% என்ற விகிதத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இது 2026 ஆம் நிதியாண்டில் மொத்தத் தனியார் துறைப் பங்களிப்புகளில் சுமார் 32% விகிதத்தை இது எட்டக் கூடும்.
  • இந்திய மிக அதிக-நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களின் ஒப்பீட்டுப் பங்களிப்புகள் 0.1% முதல் 0.15% வரை இருக்கும்.
  • அவை அமெரிக்காவில் 1.2% முதல் 2.5% வரையிலும், ஐக்கியப் பேரரசில் 0.5% முதல் 1.8% வரையிலும், சீனாவில் 0.5% முதல் 1.4% வரையிலும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்