இந்தியப் பேட்மிண்டன் சங்கத்தின் தற்போதைய தலைவரான ஹிமந்தா ஃபீஷ்வா சர்மா, 2022 முதல் 2026 வரையிலான 4 ஆண்டுக் காலத்திற்கு 2வது முறையாகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் அசாம் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் ஆவார்.
இவர் இச்சங்கத்தின் தலைவராக 2017 ஆம் ஆண்டில் முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இது தவிர, இவர் ஆசியப் பேட்மிண்டன் அமைப்பின் துணைத் தலைவராகவும், உலகப் பேட்மிண்டன் கூட்டமைப்பின் நிர்வாகச் சபையின் உறுப்பினராகவும் பணியாற்றச் செய்கிறார்.