TNPSC Thervupettagam

இந்தியா ஆஸ்திரேலியா சுரங்கப் பாதுகாப்பு ஒப்பந்தம்

January 19 , 2019 2042 days 557 0
  • மத்திய அமைச்சரவை இரு நாடுகளிலும் சுரங்கப் பாதுகாப்பை மேம்படுத்திட ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தனது ஒப்புதலை அளித்திருக்கின்றது.
  • இந்த ஒப்பந்தம் ஒரு ஒத்துழைப்பை பின்வருபவர்களிடையே ஏற்படுத்தும். அவர்களாவன:
    • சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி அளிப்பதற்கும் சட்டப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொறுப்பான இந்திய அரசுத் துறையான சுரங்கப் பாதுகாப்பின் இயக்குநர் ஜெனரல்
    • சுரங்கங்களின் நிலையை மேம்படுத்திடவும், பணியாளர்களுக்குப் பாதுகாப்புப் பயிற்சியினை ஏற்படுத்திடவும் பணியாற்றிடும் ஆஸ்திரேலிய ஆராய்ச்சிக் குழுமமான சுரங்கத்தில் பாதுகாப்பு, சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம்.
  • இந்த இரண்டு குழுக்களும் பாதுகாப்பு மேலாண்மை முறையை ஏற்படுத்தவும், சிறந்த பாதுகாப்பு முறைகளில் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்திடவும், கருத்தரங்குகள், மாநாடுகள் உட்பட கணிசமான சந்திப்புகளை நடத்திடவும் இணைந்து பணியாற்றும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்