2023 ஆம் ஆண்டு இந்தியாவின் பொலிவுறு நகரங்களுக்கான மாநாடானது இந்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தூர் நகரமானது 'சிறந்த பொலிவுறு நகரம்' என்ற மதிப்புமிக்க கௌரவத்தைப் பெற்றது.
இந்தியாவின் சிறந்த நகரங்களுக்கான விருதுகளில் குஜராத்தின் சூரத் இரண்டாவது இடத்தையும், உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
இம்மாநாட்டில் நாட்டின் சிறந்த மாநிலமாக மத்தியப் பிரதேசம் ஆனது தேர்ந்தெடுக்கப் பட்டது.
இதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை இணைந்து இதில் மூன்றாவது இடத்தைப் பிடித்தன.
நிதிச் செயல்பாடுகள், மாதிரிச் சாலைகள், ஏரிகள் புனரமைப்பு ஆகிய செயல்பாடுகளில் சிறப்பாகச் செயலாற்றியதற்காக மூன்று முதல் பரிசுகளை கோயம்புத்தூர் மாநகராட்சியானது பெற்றுள்ளது.
கலாச்சார மேம்பாடு மற்றும் நகரத்தின் வரலாற்றைப் பேணுதல் தொடர்பான திட்டங்களுக்காக மூன்றாம் பரிசினை தஞ்சாவூர் மாநகராட்சியானது பெற்றுள்ளது.
பள்ளிகளை எண்ம மயமாக்கியதற்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு மூன்றாம் பரிசானது கிடைத்துள்ளது.