TNPSC Thervupettagam

இந்தியா ஜப்பான் திரவ இயற்கை எரிவாயு சந்தை

October 12 , 2017 2472 days 770 0
  • மத்திய அமைச்சரவையானது இந்தியா மற்றும் ஐப்பானுக்கிடையே இலகுவாக எளிதில் மாற்றியமைக்கும் தன்மையுடைய மற்றும் உலகலாவிய  திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) சந்தையை நிறுவுவதில் புரிந்துணர்வு ஒத்துழைப்பு (Memorandum Of Cooperation)ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.
  • இலகுவாக்கும் தன்மையை எளிதாக்க ஒத்துழைக்கும் வகையில் உள்ள கட்டமைப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்குகிறது.
  • இந்தியாவும் மற்றும் ஜப்பானும் உலகின் மிகப்பெரிய எரிசக்தி நுகர்வோர்கள் ஆவர். LNG பிரிவில் உலகின் பெரிய இறக்குமதி நாடாக ஜப்பானும், நான்காவது பெரிய இறக்குமதி நாடாக இந்தியாவும் உள்ளது.
  • எரிசக்தி துறையில் இந்தியா மற்றும் ஜப்பானுடனான இருநாட்டு உறவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உயர்த்தும். மேலும் இது இந்தியாவிற்கு எரிவாயு வழங்கும் நாடுகளை அதிகப்படுத்துவதோடு நாட்டின் எரிசக்தி பாதுகாப்புத் திறனையும் பலப்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்