TNPSC Thervupettagam

இந்தியா - தென்னாப்பிரிக்கா வணிக மாநாடு

May 1 , 2018 2273 days 656 0
  • முதல் இந்தியா - தென் ஆப்பிரிக்கா வணிக மாநாடானது தென்னாப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சண்ட்டோன் மையத்தில் நடைபெறவுள்ளது.

  • மரபின் மூலம் ஒன்றிணைந்துள்ளோம், செழுமைக்காக ஒருங்கிணைந்துள்ளோம் - இரு நாடுகளின் பகிரப்பட்ட வரலாறுகளை பிரதிபலித்தல் (United by Legacy, Unified for Prosperity - reflecting the shared histories of the two countries) என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், முதலீடு இந்தியா அமைப்பு, கௌடெங் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Gauteng Growth and Development Agency), இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு (of Indian Industry-CII) ஆகியவற்றுடனான கூட்டிணைவோடு இணைந்து இந்திய உயர் ஆணையம் (high commission of India) இந்த மாநாட்டை நடத்தவுள்ளது.
  • இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு இடையேயான 25-வது வருட இராஜ்ஜிய ரீதியான உறவுகளின் தொடக்கத்தில் இந்தியா அல்லது தென்னாப்பிரிக்காவில் வணிக மாநாடு நடைபெற உள்ளது இதுவே முதன்முறையாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்