சமீபத்தில், இந்தியா-மத்திய ஆசியா பேச்சுவார்த்தையின் இரண்டாவது கூட்டத்தை இந்தியாவானது இணைய வழியில் நடத்தியது.
தற்போது மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியாவானது கூடுதலாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு கடன் வரம்பை நீட்டித்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையின் முதல் கூட்டமானது 2019 ஆம் ஆண்டின் ஜனவரியில் உஸ்பெகிஸ்தான் குடியரசின் சமர்கண்டில் நடத்தப் பட்டது.
இது இந்தியாவிற்கும் மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் இடையிலான அமைச்சர்கள் அளவிலான ஒரு பேச்சுவார்த்தையாகும்.
பனிப் போருக்குப் பின்பு, 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்த ஐந்து நாடுகளும் சுதந்திர நாடுகளாக உருவெடுத்தன.
துர்க்மெனிஸ்தானைத் தவிர இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர் நாடுகளாகும்.