30வது இந்தோ-தாய் CORPAT (Coordinated Patrol) எனப்படும் ஒரு ஒருங்கிணைந்த கடற்படைப் பயிற்சி இந்தியக் கடற்படைக்கும் ராயல் தாய்லாந்துக் கடற்படைக்கும் இடையில் அந்தமான் கடல் பகுதியில் நடத்தப் பட்டது.
CORPAT பயிற்சியானது பங்கேற்கும் கடற்படைகளுக்கு இடையில் ஒரு ஊடாடும் தன்மையை உருவாக்குகிறது.
பிராந்தியத்தில் உள்ள அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற ஒரு திட்டத்தின் கீழ், இந்தியக் கடற்படையானது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்குக் கண்காணிப்பு. மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணங்களுக்கு உதவுகிறது.
இந்த முன்னெடுப்பின் பயனாளிகளுள் தாய்லாந்தும் ஒன்றாகும்.
இந்தியாவும் தாய்லாந்தும் 2006 ஆம் ஆண்டு முதல் வருடாந்திர இருதரப்புப் பயிற்சியான MAITREE என்ற ஒரு பயிற்சியை நடத்துகின்றன.
SITMEX என்பது இந்தியா – தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஒரு கடல்சார் பயிற்சியாகும்.