இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சபீர் அலி என்பவர் சமீபத்தில் காலமானார்.
1981 ஆம் ஆண்டில் டோக்கியோ நகரில் நடந்த ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் டெகாத்லான் தங்கப் பதக்கத்தினை இவர் வென்றார்.
காத்மண்டு மற்றும் டாக்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் இவர் வென்றார்.
இவர் 1979 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற பல்வேறு கடுமையானப் போட்டிகளில் தொடர்ச்சியாக எட்டு ஓபன் போட்டிகளின் தேசியப் பட்டங்களையும் வென்றுள்ளார்.
அலி 1981 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக இரயில்வே துறை சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று உள்ளார்.
இவருக்கு 1981 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அப்போதையக் காலங்களில், டேலி தாம்சன் ‘ஒலிம்பிக் போட்டிகளின் இரும்பு மனிதர்’ என்றும், சபீர் ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்றும் அழைக்கப்பட்டனர்.