எகிப்தின் ஷரம் எல் ஷேக்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு ஒப்பந்தத்தின் 27வது உறுப்பினர்கள் மாநாட்டில், ‘நீடித்த உணவு குளிர்ப் பதனச் சங்கிலி, வாய்ப்புகள், சவால்கள் மற்றும் அடுத்த கட்டத்தை நோக்கி’ என்ற அறிக்கையானது வெளியிடப்பட்டது.
உணவுப் பதப்படுத்துதல், அதை உறையிடுதல், அதன் நுகர்வு மற்றும் விநியோக அமைப்புகளில் குளர்பதனச் சங்கிலிகள் வறுமை மற்றும் பட்டினியின் சுழற்சியில் இருந்து லட்சக்கணக்கான மக்களை வெளியேற்றுவதற்கு மிகவும் முக்கியமானது ஆகும்.
இது 2050ம் ஆண்டிற்குள்ளாக, ஒரு கூடுதல் அளவாக இரண்டு பில்லியன் மக்களுக்கு உணவளிக்கச் செய்திடும் சவாலை நிறைவேற்றுவதில் உதவியாக இருக்கும்.
உணவு நட்டம் மற்றும் இழப்பானது உலகளாவியப் பசுங்குடில் வாயு உமிழ்வில் ஏறக்குறைய 8 முதல் 10 சதவிகித அளவிற்குப் பொறுப்பானதாக இருக்கும்.