மத்திய எழில் முற்றத் திட்டத்தின் ஒரு பகுதியான இந்தியாவின் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தைப் பிரதமர் புது தில்லியில் திறந்து வைத்தார்.
புதியப் பாராளுமன்றக் கட்டிடம் மூன்று மாடிகளைக் கொண்டு 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப் பட்டுள்ளது.
மக்களவை நடைபெறும் பகுதியில் தற்சமயம் 888 இருக்கைகள்உள்ள நிலையில் அதை மேலும்1,272 இருக்கைகளாக விரிவுபடுத்தி கொள்ளும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.
1993 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் நிறுவப்பட்டு இருந்த காந்தி சிலையானது கட்டுமானப் பணியின் போது மாற்றப் பட்டுள்ளது.
தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் 9,500 கிலோ எடையும் 6.5 மீட்டர் உயரத்தில் தேசியச் சின்னமான அசோகச் சின்னம் இந்தக் கட்டிடத்தில் நிறுவப் பட்டு ள்ளது.
புதியப் பாராளுமன்றத் திறப்பு விழாவையொட்டி அதன் நினைவு தபால் தலையும், 75 ருபாய்சிறப்பு நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்.