TNPSC Thervupettagam

இந்தியாவின் மிக உயர்ந்த மூவர்ண கொடி

October 20 , 2018 2099 days 767 0
  • இந்தியாவின் மிக உயர்ந்த மூவர்ணக் கொடியை மும்பையில் உள்ள புகழ்பெற்ற மெஜஸ்டிக் ஹஜ் மாளிகையின் மேல்தளத்தில் மத்திய சிறுபான்மை நல அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஏற்றி வைத்தார்.
  • இந்த தேசியக் கொடியானது 20x30 அடி அளவுடையது. தரைமட்டத்திலிருந்து 350 அடி உயரத்தில் இது பறக்க விடப்பட்டது.
  • இந்தக் கொடியானது தெற்கு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா முனையத்தின் அருகில் உள்ள புகழ்பெற்ற கட்டிடத்தின் உச்சியில் 20 மீட்டர் உயரக் கம்பத்தில் ஏற்றப்பட்டது.
  • இது நாட்டில் இதுவரையல்லாத அளவில் உயர்ந்த கட்டிடத்தின் உச்சியில் அதிக உயரத்தில் ஏற்றப்பட்ட மிக உயர்ந்த மூவர்ணக்கொடியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்