கேரள மாநிலமானது ஐக்கிய நாடுகளின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளின் அடிப்படையில் தனது முதலாவது சர்வதேச மகளிர் வர்த்தக மையத்தை அமைக்க உள்ளது.
இந்தியாவில் அமைக்கப்பட இருக்கும் இதே வகையைச் சேர்ந்த முதலாவது மையம் இதுவாகும். இது மகளிர் தொழில்முனைவுத் திறனை ஊக்கப்படுத்த உள்ளது.
சர்வதேச மகளிர் வர்த்தக மையமானது பெண்களுக்கான இசை, நடனம், அரங்கம் போன்ற கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளை ஊக்கப்படுத்துவதற்கு பெண்களுக்கு ஒரு தளத்தை அளிக்க உள்ளது.
இந்த மையமானது குழந்தைகளுக்கான பகல்நேரக் காப்பகம் மற்றும் குழந்தைகள் நல மையத்தைக் கொண்டிருக்கும்.