இந்தியாவின் முதல் எத்தனால் ஆலை
May 6 , 2022
808 days
780
- பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் எத்தனால் ஆலையைப் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைத்தார்.
- இது நாட்டின் முதல் தானிய அடிப்படையிலான எத்தனால் ஆலை ஆகும்.
- பீகாரில், 17 எத்தனால் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
- இவை ஒவ்வோர் ஆண்டும் 35 கோடி லிட்டர் எரிபொருளை உற்பத்தி செய்யும் என எதிர் பார்க்கப் படுகிறது.
- இந்த ஆலைகள் கரும்பு, வெல்லப்பாகு, மக்காச்சோளம் மற்றும் உடைந்த அரிசி ஆகியவற்றை எரிபொருள் உற்பத்திக்குப் பயன்படுத்துகின்றன.
Post Views:
780