TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் கலைமான் (பிளாக்பக்) பாதுகாப்பு சரணாலயம்

November 4 , 2017 2448 days 1309 0
  • உத்திரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத் பகுதியில் உள்ள யமுனை நதிக்குட்பட்ட மேஜா வனப் பிரிவில் கலைமான் (பிளாக்பக்) இன மான்களுக்கான பாதுகாப்பு சரணாலயத்தை அமைக்க உத்திரப்பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • சுமார் 350 கலைமான்கள் இப்பகுதியில் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
  • ஆனால் நாட்டின் ஒரு சில சரணாலயங்கள் மற்றும் தேசிய வனவிலங்கு பூங்காக்களில் மட்டுமே இம்மான்கள் வசிக்கின்றன.
அவற்றுள் சில,
  1. குஜராத்திலுள்ள வேலவதார் வன விலங்கு சரணாலயம்.
  2. கர்நாடகாவிலுள்ள ராணிபென்னுர் சரணாலயம்.
 
  • 1972-ஆம் ஆண்டின் வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 36 A (1) மற்றும் (2)-ன் கீழ் உத்திரப்பிரதேச அரசு அமைக்கவிருக்கும் இந்த பாதுகாப்பு சரணாலயமானது கலைமான்களுக்கென பிரத்யேகமாக ஏற்படுத்தப்படும் நாட்டின் முதல் கலைமான் பாதுகாப்பு சரணாலயமாகும்.
கலைமான்கள்
  • இந்திய கலைமான்கள் ஓர் மறிமான்களாகும். தற்போது இவை மறிமான்கள் பேரினத்தைத் சேர்ந்த ஒரே உயிர்வாழும் மான் இனமாகும்.
  • சிறுத்தைகளுக்கு அடுத்து உலகின் வேகமான விலங்கினமாக கலைமான்கள் கருதப்படுகிறது.
  • இவை ஒன்றிலிருந்து நான்கு சுழற் திருகுகளை கொண்ட வளையக் கொம்புகளை உடையவை.
  • பொதுவாகப் பெண் கலைமான்களுக்குக் கொம்புகள் இருப்பதில்லை.
  • இந்திய வன விலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் அட்டவணை ஒன்றின் (Schedule 7) கீழ் இந்தக் கலைமான்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், இவற்றின் மீதான வேட்டையாடுதல் தடை செய்யப்பட்டுள்ளது.
  • இவை பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN-International Union For Conservation of Nature) சிவப்புத் தரவு புத்தகத்தின் (Red Data Book) குறைந்த கவனமுடைய (Least Concerned) வகைப்பாட்டில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • ராஜஸ்தானில் உள்ள பிஷ்னாய் (Bishnoi) சமூகத்தினர், கலைமான்கள் மற்றும் சின்காரா இன மான்களை பாதுகாக்கும் தங்களுடைய  நடவடிக்கைகளுக்காக உலகப் பெயர் பெற்றவர்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்