TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் குளோனிங் அஸ்ஸாமிய எருது

March 22 , 2018 2311 days 695 0
  • மத்திய எருதுகள் ஆராய்ச்சி நிறுவனமானது (Central Institute for Research on Buffaloes-CIRB) இந்தியாவில் முதல் முறையாக குளோனிங் முறை மூலம் அஸ்ஸாமிய ஆண் எருதுக் கன்று (Assamese buffalo male calf) ஒன்று பிறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
  • ஆராய்ச்சியாளர்கள் குழுவானது தனித்துவ முறைகளைப் பயன்படுத்தி சாதாரணப் பிரசவத்தின் மூலம் “சச் கவுரவ்” (Such Gaurav) எனும் அஸ்ஸாமிய எருமைகளின் முதல் குளோனிங் கன்றை (Clone Calf) உருவாக்கியுள்ளனர்.
  • P.S யாதவ் தலைமையிலான மத்திய எருதுகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் குளோனிங் குழு இந்த சாதனையைப் புரிந்துள்ளது.
  • அஸ்ஸாமில் உள்ள ஹை-டெக் சச் டெய்ரி பண்ணையில் (Hi Tech Sach Dairy Farm) முர்ரா வகை எருமைக்கு  இந்த குளோனிங் கன்று பிறந்துள்ளது; பண்ணைக் களத்தில் பிறந்த முதல் குளோனிங் கன்று இதுவேயாகும்.
  • இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்குழுவின் (ICAR- Indian Council of Agricultural Research) - மத்திய எருதுகள் ஆராய்ச்சி நிறுவனத்தால் குளோனிங் முறை மூலம் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது குளோனிங் ஆண் எருது இதுவாகும்.
  • இதற்கு முன் 2015- ல் கவுரவ் எனும் ஹிசார் வகை  ஆண் எருது குளோனிங் முறை மூலம் உருவாக்கப்பட்டது.
  • குளோனிங் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இக்கன்றின் மரபியல் தோற்றமானது பெற்றோர் சந்ததி சரிபார்ப்பிற்கான (Parentage verification)   மைக்ரோ சாட்டிலைட் பகுப்பாய்வு (Micro satellite analysis) மூலமும் குரோமோசோம் பகுப்பாய்வு (chromosome analysis) மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்