TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மையம்-மும்பை

February 17 , 2018 2344 days 986 0
  • இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence-AI) மையத்தை மகாராஷ்டிரா அரசு மும்பையில் அமைக்க உள்ளது.
  • இந்த மையமானது நான்காம் தொழிற்புரட்சியை ஏற்படுத்துவதற்கான முக்கிய மையமாக இருப்பது மட்டுமில்லாமல் தரவுப் பகுப்பாய்வு மற்றும் கண்டுபிடிப்புகளில் மும்பையை முதலீட்டிற்கான இடமாகவும் மேம்படுத்தும்.
  • இதற்கு முன்பாக மஹாராஷ்டிரா அரசு செயற்கை நுண்ணறிவை சுகாதாரத் துறையில் பயன்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • அதோடு மட்டுமல்லாமல் மஹாராஷ்டிரா அரசு, கனடா அரசுடன் கூட்டுப் பணிக்குழு (joint working group) ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டுப் பணிக்குழு AI ஒத்துழைப்பிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்