TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் துளிமக் கணினி

September 12 , 2024 21 days 85 0
  • இந்தியாவில் துளிமத் (குவாண்டம்) தொழில்நுட்பத்தின் மேம்பாட்டினை மிக விரைவு படுத்தச் செய்வதற்காக தேசிய துளிமத் திட்டத்திற்கு இறுதியாக ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.
  • இந்தத் துறையில் உள்ள பல்வேறு புத்தொழில் நிறுவனங்கள் 10 முதல் 50 கோடி ரூபாய் வரை மானியம் பெறலாம்.
  • அடுத்த இரண்டு மாதங்களுக்குள் 6 கியூபிட்ஸ் திறன் கொண்ட இந்தியாவின் முதல் குவாண்டம் கணினியை அறிமுகப்படுத்தவும் இந்த முன்னெடுப்புத் திட்டமிட்டுள்ளது.
  • தேசிய துளிமத் திட்டம் ஆனது, இந்தியாவில் துளிமக் கணினியியல் மேம்பாட்டிற்காக சுமார் 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
  • அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 20-50 கியூபிட்ஸ் கணக்கீடு கொண்ட துளிமக் கணினியை நிறுவுவதே இத்திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.
  • மேலும், இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50-100 கியூபிட்ஸ்களையும் அடுத்த 10 ஆண்டுகளில் 50-1000 கியூபிட்ஸ்களையும் நிறுவ உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்