TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பிட்காயின் வர்த்தக செயலி

December 29 , 2017 2393 days 864 0
  • மெய்நிகர் நாணயங்களின் (virtual currencies) பரிவர்த்தனைகளுக்காக துபாயைச் சேர்ந்த “புளுட்டோ எக்ஸ்சேஞ்ச்“ எனும் நிறுவனம் இந்தியாவின் முதல் பிட்காயின் (எண்ம நாணயம்) வர்த்தக செயலியை (Trading App) வெளியிட்டு உள்ளது.
  • பணப்பை வசதியின் அடிப்படையிலான இந்த இந்தியாவிற்கான முதல் பிட்காயின் செயலியின் மூலம் கைபேசி எண்ணைப் பயன்படுத்தி பிட்காயின் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும். இது இந்திய சந்தைகளுக்குக்காக பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ளது.
  • கட்டணம் செலுத்துதல், வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புதல் (Remittance), இரு வணிக நிறுவனங்களுக்கிடையிலான   வர்த்தகம், விநியோக சங்கிலிகளின்    நிதியளிப்பு, சொத்து மேலாண்மை, வர்த்தகம் போன்றவை உட்பட பல்வேறு பரிவர்த்தனை நடவடிக்கைகளை இச்செயலி மூலம் மேற்கொள்ள இயலும்.
  • பிட்காயின்கள் ஓர் சங்கேத இணையப் பணமாகும். (Crypto Currency).
  • கட்டணச் செலுத்து அமைப்பாக (Payment System) பயன்படும் இவை உலகின் முதல் மையப்படுத்தப்படாத/பரவலாக்கப்பட்ட (decentralised) டிஜிட்டல் பணமாகும்.
  • உலகில் பிட்காயின் நாணயமுறையை கட்டுப்படுத்த எந்த மத்திய வங்கியும், நிர்வாக முறையும் இல்லை. இரகசிய குறியாக்கத்தின் (Crypography) உதவியோடு இதன் அனைத்து பரிவர்த்தனை நடவடிக்கைகளும் இருமுனை பயன்பாட்டாளர்களின் (Peer to Peer) வழியே மேற்கொள்ளப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்