TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் ‘மெத்தனால் சமையல் எரிபொருள் திட்டம்’

October 8 , 2018 2111 days 747 0
  • நம்ருப்-ஐ மையமாகக் கொண்ட அசாம் பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் (APL - Assam Petrochemicals Limited) நிறுவனமானது ஆசியாவின் முதலாவது உலோக கொள்கலன் அடிப்படையிலான மற்றும் இந்தியாவின் முதலாவது மெத்தனால் சமையல் எரிபொருள் திட்டத்தை அசாமில் தொடங்கியுள்ளது.
  • இந்த திட்டமானது நிதி ஆயோக் மூலம் ஊக்குவிக்கப்பட்டது.
  • பாதுகாப்பாக கையாளக்கூடிய உலோக கொள்கலன்கள் அடிப்படையிலான இந்த சமைக்கும் அடுப்புகள் ஸ்வீடன் தொழில்நுட்பத்திடமிருந்து பெறப்பட்டது ஆகும்.
  • நம்ருப்பைச் சேர்ந்த ரித்து போர்டோலி இந்தியாவின் முதலாவது மெத்தனால் அடிப்படையிலான சமையல் அடுப்பின் உரிமையாளர் மற்றும் பயனாளராக ஆகியுள்ளார்.
  • இயற்கை எரிவாயுவை ஊட்டுதிறனாகக் கொண்டு மெத்தனால் மற்றும் பார்மாலின் தயாரிக்கும் இந்தியாவில் முதல் பொதுத்துறை உற்பத்தியாளராக APL நிறுவனம் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்