TNPSC Thervupettagam

இந்தியாவிற்கு எதிரான வோடபோன் வழக்கு

September 29 , 2020 1392 days 562 0
  • வோடபோன் நிறுவனமானது தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றமான நிரந்தர நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான ரூ. 20,000 கோடி நிலுவைத் தொகை வழக்கில் வெற்றி பெற்றுள்ளது.
  • இந்திய அரசானது 2007 ஆம் ஆண்டில் வோடபோன் நிறுவனத்திடமிருந்து நிலுவை வரிகளையும் மூலதன இலாபத்தில் ரூ.7990 கோடி ரூபாயையும் வழங்குமாறு கோரியது.
  • வோடபோன் நிறுவனம் இது குறித்து மும்பை (பம்பாய்) உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் வருமான வரித் துறைக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது.
  • அதன்பின், இந்நிறுவனம் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
  • இந்திய உச்சநீதிமன்றமானது 2012 ஆம் ஆண்டில் வருமான வரிச் சட்டம், 1961 எனும் சட்டத்தின் படி வோடபோன் குழுமத்தின் இடையீடு சரி என்று தீர்ப்பு வழங்கியது.
  • ஆனால் அதே ஆண்டில் மத்திய அரசானது இது போன்ற ஒப்பந்தங்களில் முன்தேதியிட்ட காலத்திற்கான வரி குறித்த அதிகாரங்களை வருமான வரித் துறைக்கு வழங்குவதற்காக நிதிச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை மேற்கொண்டது.
  • இந்த வழக்கு அப்பொழுதுமுன்தேதியிட்ட காலத்திற்கான வரி வழக்கு” (retrospective taxation case) என்று அறியப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்